பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

நான் கொய்யாத, பிறர் கொய்திய எனக்குப் பிடித்த கவிதைகள்.



தேசத்தின் குரல் (ஆன்ரன் பாலசிங்கம்) - இலக்கியன்

தேசத்தின் குரலோனே
செங்கதிர் சொல்லோனே
தேசியத்தின் சுவடோடு
சென்றுவிட்ட வல்லோனே
தமிழ் வாழும் நாள் எல்லாம்
வாழ்ந்திடுவீர் எம்மோடே

காலனின் வருகை கண்டும்
கலங்கினீர் தமிழனுக்காய்
காலம் கனியும் நேரத்தில்
கவர்ந்து விட்டான் காலதேவன்

பேனா முனைகளிலே
பேசியது உம் உணர்வு
துப்பாக்கித் தோட்டாவாக
துளைத்தது சிங்களத்தை

பேச்சுவார்த்தை மேசைகளில்
பேரமிட்ட சிங்கள துவேசிகளை
மதியுரைஞர் உம் மதியினாலே
மதியிழந்து கலங்கவைத்தீர்

போரும் சமாதனமும் தந்தீர்
போற்றுகின்ற பொக்கிசமாய்
நோய் வந்து உழன்றபோதும்
நேசித்தீர் சமதானத்தை

தேசியத்தலைவரின்
நேசத்துக்குரிய நண்பா
தேசம் போற்றும் உம்
நேசக்கரம் என்றும்


கொய்தது பிச்சி @ 4:15 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்