முதன்முதலாய் அம்மாவுக்கு - கவிஞர் வைரமுத்து
Saturday, January 20, 2007
ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாய்ப் பொய்சொன்னேன்
பெத்தவளே உன்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே
காத்தெல்லாம் அவன்பாட்டு
காகிதத்தில் அவனெழுத்து
ஊரெல்லாம் அவன்பேச்சு
உன்கீர்த்தி எழுதலையே
எழுதவோ படிக்கவோ
இயலாத தாய்பற்றி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் விட்டேனோ
பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே
வயிரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு
கண்ணுகாது மூக்கோடை
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னென்ன நினைச்சிருப்ப
கத்தி எடுப்பவனோ
களவாடப் பிறந்தவனோ
தரணியாள வந்திருக்கும்
தாசில்தார் இவன்தானோ
இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்தஉன்னை
நினைச்சா அழுகைவரும
கதகதெண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளை குழிவெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே
தொண்டையிலை அதுஇறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையிலை இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா
தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக்குழம்பு மேலை
குட்டிகுட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்
வைகையிலை ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரையேத்தி விட்டவளே
எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேறை பிள்ளையுண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேறை தாயிருக்கா...
அழகழகாய்ப் பொய்சொன்னேன்
பெத்தவளே உன்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே
காத்தெல்லாம் அவன்பாட்டு
காகிதத்தில் அவனெழுத்து
ஊரெல்லாம் அவன்பேச்சு
உன்கீர்த்தி எழுதலையே
எழுதவோ படிக்கவோ
இயலாத தாய்பற்றி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் விட்டேனோ
பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே
வயிரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு
கண்ணுகாது மூக்கோடை
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னென்ன நினைச்சிருப்ப
கத்தி எடுப்பவனோ
களவாடப் பிறந்தவனோ
தரணியாள வந்திருக்கும்
தாசில்தார் இவன்தானோ
இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்தஉன்னை
நினைச்சா அழுகைவரும
கதகதெண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளை குழிவெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே
தொண்டையிலை அதுஇறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையிலை இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா
தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக்குழம்பு மேலை
குட்டிகுட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்
வைகையிலை ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரையேத்தி விட்டவளே
எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேறை பிள்ளையுண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேறை தாயிருக்கா...
கொய்தது பிச்சி @ 9:25 AM,