பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

நான் கொய்யாத, பிறர் கொய்திய எனக்குப் பிடித்த கவிதைகள்.



முதன்முதலாய் அம்மாவுக்கு - கவிஞர் வைரமுத்து

ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாய்ப் பொய்சொன்னேன்
பெத்தவளே உன்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே

காத்தெல்லாம் அவன்பாட்டு
காகிதத்தில் அவனெழுத்து
ஊரெல்லாம் அவன்பேச்சு
உன்கீர்த்தி எழுதலையே

எழுதவோ படிக்கவோ
இயலாத தாய்பற்றி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் விட்டேனோ

பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே

வயிரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு

கண்ணுகாது மூக்கோடை
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னென்ன நினைச்சிருப்ப

கத்தி எடுப்பவனோ
களவாடப் பிறந்தவனோ
தரணியாள வந்திருக்கும்
தாசில்தார் இவன்தானோ

இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்தஉன்னை
நினைச்சா அழுகைவரும

கதகதெண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளை குழிவெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே

தொண்டையிலை அதுஇறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையிலை இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா

தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக்குழம்பு மேலை
குட்டிகுட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வைகையிலை ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரையேத்தி விட்டவளே

எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேறை பிள்ளையுண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேறை தாயிருக்கா...

கொய்தது பிச்சி @ 9:25 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்